Posts

நீ சமுதாயத்தில் நாணயங்களை சம்பாதிப்பதைவிட நாணயத்தை சம்பாதித்துப் பார் சமுதாயத்தில் மதிப்பு அதிகம்.
உன்னை அழிக்க நினைப்பவர்களிடம் நீ துணிவுடன் வெற்றிபெற்றால் உனக்கு சாதனை அதுவே நீ அவர்களிடம் தோல்வி பெற்றால் உனக்கு வேதனை இதான் வாழ்க்கை 
நம்மை மதிக்காதவர்களிடம் மண்டியிட்டு வாழ்வதைவிட நம்மை மதிப்பவர்களிடம் மனிதனாக வாழ்வதே சிறந்தது 
என்றும் நினைவில்கொள் ஒருவருடைய பணத்தால் பிறரை அழிக்க முடியும் ஆனால் அந்த பணத்தால் பிறரின் அன்பை வாங்க முடியாது. 
 உன்னுடைய கஷ்ட  காலங்களில் ஆயிரம் பேர் உன்னை கைவிட்டபோதிலும் உனக்காக ஒருவர் உதவிசெய்தால் அவரை தெய்வமாக நினை. 
கூடவே இருந்து துரோகம் செய்யும் நண்பனை நம்புவதைவிட தூரத்திலிருந்து துரோகம் செய்யும் எதிரியை நம்பு ஏனென்றால் சிலநேரம் தூரத்திலிருந்து துரோகம் செய்பவன் மறந்துவிடுவான் ஆனால் கூடவே இருந்து துரோகம் செய்பவன் அதனை தொடருவான்
சமுதாயத்தில் பிறரிடம் நடித்து வாழ்வதைவிட பிறரை மதித்து வாழ்வதே சிறந்தது

Popular posts from this blog

யாரையும் நம்பாதே!

அளவோடு பழகு